தமிழ்நாடு
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சகோதரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் என்பவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 104. வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டரில் அப்துல் கலாமின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அப்துல்கலாம் சகோதரர் மறைவு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். திரு.கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.