சினிமா செய்திகள்
பிரம்மாண்ட ரீரிலீஸ்… செல்வராகவனின் ‘ஆயிரத்தின் ஒருவன்’-ஐ கொண்டாடும் ரசிகர்கள்
![aayirathil oruvan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/aayirathil-oruvan.jpg)
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இந்தப் படத்தின் இயக்கத்துக்காக செல்வராகவன் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறார்.
#AayirathilOruvan in cinemas from Tomorrow, 31st December. #ஆயிரத்தில்ஒருவன் @selvaraghavan @rparthiepan @andrea_jeremiah #ReemaSen @gvprakash @ramji_ragebe1 #RRavindran pic.twitter.com/wtWMSOBXa0
— Actor Karthi (@Karthi_Offl) December 30, 2020
இந்த சூழலில் நாளை டிசம்பர் 31-ம் தேதி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட முறையில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதுமாக மொத்தம் 40 திரை அரங்கங்களில் இந்தத் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு வருகிறது. இதே போல் நடிகர் தனுஷ் நடித்த செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படமும் தமிழகம் முழுவதும் மறு வெளியீட்டுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இதோ ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன். !
31 st. December 2020 முதல்.“ சோழன் பயணம் தொடரும் “ pic.twitter.com/iGsrgZmGvi
— selvaraghavan (@selvaraghavan) December 30, 2020