தமிழ்நாடு
ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல்..என்ன காரணம்?
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஆசிஃப் பிரியாணி. இந்த உணவக சாப்பாடு சரியில்லை என்று கடந்த சில நாட்களாக புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.அதன் முடிவாக ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
தரமின்மை மற்றும் சுகாதாரமற்ற இறைச்சிய பயன்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.