சினிமா செய்திகள்

ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த ‘டெடி’ படக்குழுவினர்: ஆனால்…..

Published

on

நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிசா இணைந்து நடித்த ‘டெடி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை படக்குழுவினர் தாமதப்படுத்தி வந்தனர்.

முதலில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதனை படக்குழுவினர் மறுத்து, ‘டெடி’ திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடப் போவதாக கூறினார்கள்.

இந்த நிலையில் தற்போது ‘டெடி’ திரைப்படத்தின் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள பதிப்புகள் ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டதோடு, 100 சதவீத இருக்கைகளும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிட ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் என்ற முடிவை எடுத்துள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Trending

Exit mobile version