சினிமா செய்திகள்

50% படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‘கிளாப்’!

Published

on

கிளாப் என்னும் புதிய படத்தில் நடிகர் ஆதி நடித்து வருகிறார் அந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி. கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் கிளாப். இப்படத்தில் ஆதியுடன் இணைந்து அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தை குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இவ்வளவு குறுகிய நேரத்தில் படப்பிடிப்பு முடிய பாடுபட்ட இயக்குனர் மற்றும் அவரது குழு, நடிகர் ஆதி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நன்றி, என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version