Connect with us

இந்தியா

ஆதார் கைரேகை சரிபார்ப்பில் AI டெக்னாலஜி.. இனி முறைகேடு செய்யவே முடியாதா?

Published

on

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்பதும் ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வங்கியில் கணக்கு ஓபன் செய்ய வேண்டும் என்றாலும்,, ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றாலும் லோன் வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் இந்த ஆதார் அட்டையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது UIDAI என்று கூறப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு கூடுதல் வசதியாக ஆதார் அட்டை கைரேகை சரிபார்ப்பில் AI டெக்னாலஜி மற்றும் மிஷின் லேர்னிங் என்ற டெக்னாலஜி ஆகியவற்றை புகுத்த UIDAI திட்டமிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI மற்றும் இயந்திர கற்றல் என்று சொல்லப்படும் மெஷின் லேர்னிங் ஆகிய இரண்டு டெக்னாலஜி மூலம் கைரேகை பாதுகாப்பை அதிகப்படுத்த UIDAI முடிவு செய்தது. இதன் காரணமாக இந்த புதிய பாதுகாப்பு முறை ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பாkகும் என்றும் வலுவானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டவுடன் ஏமாற்றும் முயற்சிகள் குறையும் என்றும் ஆதார் அட்டையின் மூலம் எந்த ஒரு முறைகேடுகளையும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் நிதியியல், தொலைத்தொடர்பு மற்றும் அரசுத் துறைகள் போன்ற பிரிவுகளில் பெரும் பயன் மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட கட்டண முறையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் முறைகேடுக்கு எந்தவிதமான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய கைரேகை பாதுகாப்பு அம்சம் தற்போது முழுமையாக செயல்பட்டு உள்ளது என்றும் பல ஏஜென்சிகள் மற்றும் ஆய்வாளர்களிடம் இது குறித்து ஆய்வு செய்த பின்னரே இந்த புதிய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்4 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்6 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை7 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு18 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்18 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024