Connect with us

இந்தியா

மணமகன், மணமகள் இல்லாத ஒரு திருமணம்.. கலெக்டர் தலைமை நடத்தி வைத்த புதுமை..!

Published

on

ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல் முறையில் திருமணம் நடந்தால் கூட அதில் கூட மணமகன் மணமகள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணமகள் மணமகள் இல்லாமல் ஒரு திருமணம் நடந்தது என்றும் அதற்கு அந்த மாவட்டத்தின் கலெக்டரே தலைமை தாங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான கிணறு ஒன்றுக்கு தான் திருமணம் என்றும் அந்த கிணற்றுக்கும் ஒரு தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ஆட்சியர் மகேஷ் குமார் கைதல் என்பவர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது..

அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என அந்த பகுதியை சேர்ந்த 85 வயது கிஷோரி தேவி என்பவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கிணற்றுக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர் பத்திரிகைகள் பிரமாண்டமாக அடிக்கப்பட்டது என்பதும் நிஜத் திருமணத்திற்கு நடத்தப்படுவது போன்ற அலங்காரங்கள் இசை நிகழ்ச்சிகள் அறுசுவை வகை சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

துணை கலெக்டர் முன்னிலையில் மற்ற பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை கிஷோரி தேவி நடத்தி வைத்தார். பெண் வீட்டார் சார்பிலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் நடத்த வேண்டிய சடங்குகளும் நடத்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது என்பதும் அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு கிணற்றையும் தோட்டத்தையும் வாழ்த்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் காரணமாக இனி கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கை உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?