தமிழ்நாடு
முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: ஆ ராசா கொடுத்த விளக்கம் இதுதான்!
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் சமீபத்தில் அவர் முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுத்து முதல்வர் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தனது விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளார் மூன்று பக்கங்கள் அடங்கிய அந்த விளக்கத்தில் முதல்வர் குறித்தும், பெண்கள் குறித்தும் தான் கீழ்தரமாக பேசியதாக அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு ஆ ராசா மறுப்பு தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணைய விதிமுறைகளை எதுவும் தான் மீறவில்லை என்றும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.