சினிமா செய்திகள்
ஷாருக்கான் வீட்டில் திடீர் ரெய்டு: பிரபல நடிகை வீட்டிலும் சோதனை!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் திடீரென போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உல்லாச கப்பல் ஒன்றில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு இன்னும் ஜாமீன் கூட கிடைக்கவில்லை என்பதால் அவர் சிறையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவலில் நடிகை அனன்யா பாண்டேவின் பெயரும் இடம் பெற்றதால் அவருடைய வீட்டிலும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று ஒரே நாளில் ஷாருக்கான் மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இரண்டு பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.