இந்தியா

கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 12 கி.மீ நடந்த கணவர் – அதிர்ச்சி வீடியோ

Published

on

இந்தியாவில் பல கிராமங்கள் மற்றும் மலைகளில் வசிக்கும் மக்கள் கல்வி மற்றும் மருத்து வசதிகளுக்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஒருபக்கம், வட மாநிலங்களில் பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் கொடுக்க மறுப்பதால் நோயாளிகள் மற்றும் இறந்து போனவர்களை தோளில் தூக்கி கொண்டு செல்லும் வீடியோக்கள் இதற்கு முன்பு வெளியாகி அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

தற்போது அது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினத்தின் பலாபம் பஞ்யாத்துக்குட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குச்சியில் தூளி போன்ற துணி கட்டி அதில் கர்ப்பிணி பெண்ணை இருவர் 12 கி.மீ தூரம் தூக்கி சென்று ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version