உலகம்
நடுவானில் தூங்கிய விமானி.. கடல் கடந்து சென்ற விமானம்.. பரபர நிமிடம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தவர் அப்படியே அசதியில் தூங்கியுள்ளார். விமானமும் ஒரே வேகத்தில் ஒரே உயரத்தில் நேர்கோட்டில் சென்று இருக்கிறது. இப்படியே விமானம் 50 கிமீ தூரம் சென்றுள்ளது.
இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய கடல் பகுதியின் எல்லையை கடக்கும் நிலைக்கு சென்றுள்ளார். அப்படியே நேராக நெடுந்தூரம் சென்றால் அண்டார்ட்டிகாதான் அடுத்து. ஆனால் அவ்வளவு சிறிய விமானத்தில் அத்தனை தூரம் எல்லாம் செல்ல முடியாது.
அதிர்ஷ்டவசமாக அவர் திடீர் என்று தூக்கத்தில் இருந்து எழுந்தார். பின் அவசர அவசரமாக விமானத்தை திரும்பியவர் மீண்டும் தாஸ்மேனியா வந்தார். பாதுகாப்பாக தாஸ்மேனியா கிங்ஸ் தீவில் விமானத்தை தரையிறக்கினார்.