தமிழ்நாடு
கமல்ஹாசன் கார் கண்ணாடியை உடைக்க முயன்ற மர்ம நபர்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு!
தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசன் தலைமையில் மக்கள் மய்யம் மய்யம் கட்சி வரும் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சிகளும் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு அதன் பின்னர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று காஞ்சிபுரத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு புறப்பட்டார்.
அப்போது கமல்ஹாசனின் சொகுசு கார் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அந்த நபரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் சொகுசு காரின் கண்ணாடியை உடைக்க முயன்ற மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.