சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய ஐடியா வொர்க்கவுட் ஆகுமா?

Published

on

கஜா புயலின் காரணமாக மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்க நடிகர் சிம்பு வீடியோ மூலம் புது ஐடியாவை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் “டெல்டா மக்களின் நிலை நமக்கு நன்றாக தெரியும். நான் என்னால் முடிந்த உதவியை செய்வேன். எனது ரசிகர்களும் செய்து வருகின்றனர் ஆனால், சாதாரண மக்கள் உதவும் எண்ணம் கொண்டிருந்தாலும், அவர்களுடைய சின்ன தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் இருப்பர். நாம் அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகிறோம். மொபைல் நெட்வொர்க்குகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் 100 ரூபாயோ அல்லது முடியாவிட்டால் 10 ரூபாயோ நிதி திரட்டி வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்க நிவாரண நிதியில் சேர்க்கலாம். அதனை அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையுடன் உரியவர்களுக்கு உதவினால், நிச்சயம் புயலால் பாதித்த மக்கள் பலனடைவர்.” என சிம்பு யோசனை தெரிவித்துள்ளார்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் மீதும் மக்கள் பிரச்னைகள் மீதும் தொடர்ந்து சிம்பு அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version