தமிழ்நாடு
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு அடுத்தடுத்துத் தோன்றி வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான பயிர்கள் மூழ்கியது என்பதும் பொதுமக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே 2 காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்ட சேதத்தில் இருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதுவே மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.