இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமர் ஒரு முஸ்லீம் தான்: காளிச்சரண் மகாராஜ் சர்ச்சை பேச்சு

Published

on

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடுவார் என இந்துமத ஆதரவாளரான காளிச்சரண் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஜ் காளிச்சரண் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: நமது பெண்களில் 60 சதவிகிதம் பேர் வாக்களிக்க செல்வதில்லை என்றும் நமது வாழ்க்கை முறைக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கும் நிறைய வேறுபாடுகள் விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மொத்தம் 140 கோடி மக்களில் 94 கோடி பேர் இந்துக்கள் உள்ளார்கள் என்றும் 46 கோடி பேர் முஸ்லிம்கள் உள்ளார்கள் என்றும் ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களில் ஒரு தான் பிரதமராக வருவார் என்றும் காளிச்சரண் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

எனவே இந்துக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அப்போது தான் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக தொடர்ந்து இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார் . காளிச்சரண் மகாராஜ் இதற்கு முன்பே பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார் என்பதும் குறிப்பாக மகாத்மா காந்தி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசியதற்காக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version