இந்தியா

ஒமிக்ரானை அரைமணி நேரத்தில் குணமாக்கும் நாட்டு மருந்து? படையெடுக்கும் பொதுமக்கள்

Published

on

கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் ஆனந்தயா. இவர் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்து செய்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார் என்பதும் அந்த மருந்தை சாப்பிட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரை மணி நேரத்தில் குணமாகியதாக மிக வேகமாக தகவல் பரவியது

இதனை அடுத்து அவரது இல்லத்திற்கு பொதுமக்கள் படையெடுத்தனர் என்பதும் காவல்துறையினர் வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு கூட்டம் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலட்சக்கணக்கில் செலவு செய்தும் கொரோனா வைரஸை குணமாக்க முடியாத நிலையில் அவரது நாட்டு மருந்து நாட்டு மருந்து அரைமணிநேரத்தில் குணப்படுத்தி சாதனை செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கும் ஆனந்தய்யா நாட்டு மருந்து கண்டுபிடித்ததாக வந்துள்ள தகவலை அடுத்து கிருஷ்ணா பட்டினம் கிராமத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கி இருக்கின்றனர்

இந்த நிலையில் அந்த கிராம மக்களே தற்போது ஆனந்தயாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டு மருந்தை வாங்க நாடெங்கிலும் இருந்து மக்கள் குவிந்து வருவதால் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version