தமிழ்நாடு

வேட்புமனு வாங்க வந்த மேலும் ஒரு நபர் விரட்டியடிப்பு: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!

Published

on

அதிமுக அலுவலகத்தில் வேட்புமனு பெற வந்த ஒருவர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ஓமபொடி பிரசாத் என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்த நிலையில் அவர் அதிமுக தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை வடசென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வேட்புமனு வாங்க வந்ததாகவும் அவர் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் மூன்றாவதாக ஒரு நபர் வேட்புமனு வாங்க வந்த நிலையில் அவரையும் அதிமுக தொண்டர்கள் விரட்டி அடித்த காட்சியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு அந்த மூவருமே சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று அதிமுக தொண்டர்கள் கருதி அவர்களை விரட்டி அடித்ததாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version