இந்தியா
வைரல்: மீனவர்கள் வலையில் மாட்டி கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்..!
கேரள மாநிலத்தில், மீனவர்கள் வலையில் மாட்டி ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மீனவர்கள் வலையில் மாட்டியது அழிவின் விளிம்பில் இருக்கும் திமிங்கல சுறா எனப்படுகிறது. அந்த திமிங்கலத்தை மீண்டும் பத்திரமாக கடலுக்கே இழுத்துச் சென்று விட்டுள்ளனர் மீனவர்கள். இது குறித்தான வீடியோ வைரலாகி மீனவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு கடற்கரையில் ஓரத்திலேயே சில மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போதுதான் பிரம்மான்ட திமிங்கல சுறா ஒன்று அவர்களது வலையில் சிக்கியுள்ளது. மாட்டிக் கொண்ட திமிங்கலம் என்ன செய்வதென்று புரியாமல் கரை ஒதுங்கியுள்ளது.
Watch: An endangered whale shark released into the sea by fishermen in Kerala’s Shanghmukham on Friday, after it was caught in their net. A group of fishermen tore into the net, and helped it back, in a matter of minutes, says Ajith. Video courtesy: Ajith Shanghmukham. pic.twitter.com/jDcr12VCuK
— Sneha Koshy (@SnehaMKoshy) December 5, 2020
ஆனால் இந்த திமிங்கலம் பற்றி அறிந்திருந்த மீனவர்கள், அதை மீண்டும் கடலிலேயே கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளனர். உடனடியாக கரை ஒதுங்கிய திமிங்கலத்தை சுமார் 60 மீனவர்கள் சில நிமிடங்களில் கடலுக்குள் தள்ளிக் கொண்டு போய் விட்டுள்ளனர். இப்படி அரிய வகை உயிரினம் ஒன்றை மீனவர்கள் உடனடியாக யோசித்துக் காப்பாற்றியுள்ளது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கரை ஒதுங்கிய அரிய வகை திமிங்கலம், உலகின் மிகப் பெரிய உயிரனங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. அது சுமார் 1,000 கிலோ எடை கொண்டிருக்கலாம் என்றும் தகவல். இதைப் போன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் பற்றி ரேஞ்சர் அதிகாரி ஷாஜி ஜோஸ், ‘திமிங்கல சுறா அழியும் விளிம்பில் இருக்கும் உயிரினம். கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீண்டும் கடலில் சேர்த்தது குறித்து சம்பந்தப்பட்ட மீனவர்களைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். இதற்கு அவர்களுக்குத் தக்க சம்மானம் கொடுக்கப்படும். இனிமேலும் தங்கள் வலைகளில் சிக்கும் இதைப் போன்ற உயிரினங்களை மீனவர்கள் காப்பாற்ற ஊக்குவிக்கப்படும்’ என்றுள்ளார்.