தமிழ்நாடு

காவலரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்.! காரணம் என்ன?

Published

on

அண்மையில் தமிழகக் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தை அடக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக ரவுடிசத்தைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டில் சில என்கவுண்டர்கள் கூட நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான நீலமேக அமரன் என்பவரை நேற்று மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பள்ளி அருகே 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதப்படை காவலர் அமரனை கொடூரமான முறையில், சுங்க சாவடி சாலையில் ஓட ஓட விரட்டி சென்ற அந்தக் கும்பல், வெட்டி படுகொலை செய்துள்ளது.

பொது இடத்தில் மக்களின் முன்னிலையில் ஒரு காவலரை விரட்டி வெட்டி கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இதுவரை 3 பேரை கைது செய்து, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version