இந்தியா

திருப்பதியில் திடீர் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்!

Published

on

நேற்று நள்ளிரவு திடீரென ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட இந்தியாவில் அவ்வப்போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென தென்னிந்தியாவில் குறிப்பாக ஏழுமலையான் குடியிருக்கும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நள்ளிரவு திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் என்ரா அளவில் பதிவு செய்யப்பட்டதாகவும் இந்திய தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பதட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த விதமான சேதமும் இல்லை என்ற அறிவிப்பு அனைவருக்கும் நிம்மதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version