தமிழ்நாடு

பிரஸ் மீட்டில் காக்கா ஓட்டிய அமைச்சர்கள்… கல கல வைரல் சம்பவம்

Published

on

தமிழக அமைச்சர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில், காக்கா வந்து தொல்லை கொடுத்ததும், அதை அவர்கள் ஓட்டிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது.

தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, இருவரும் கூட்டாக நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அமைச்சர்களை பதில் சொல்ல விடாமல் காக்கா ஒன்று மேலே வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த செங்கோட்டையன், ‘போ… போ…’ என்று அதை ஓட்டினார். அமைச்சர் ஜெயக்குமாரும் சுதாரித்துக் கொண்டு, மேலே பார்த்து காக்காவை துரத்தினார். இருப்பினும் காக்கா தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் ஜெயக்குமார், ‘அதை ஓட்டாதீங்க… காக்கா போட்டா அதிர்ஷ்டங்க’ என்று செங்கோட்டையனைப் பார்த்து நக்கல் அடித்தார். அதற்கு செங்கோட்டையன், ‘அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கடுங்க. எனக்கு வேணாம்’ என்று கேலி செய்தார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்தவர்கள் எல்லாம் குலுங்கி குலுங்கிச் சிரித்தார்கள்.

seithichurul

Trending

Exit mobile version