சினிமா செய்திகள்
பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: கைது செய்யப்படுவாரா?
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடந்த சில நாட்களாக யூடியூப் சேனலுக்கு பரபரப்பான பேட்டி அளித்து வருகிறார் என்பதும் அதில் அவர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கூறி வருகிறார் என்று தெரிந்தது
அவரது கருத்து பிரபல நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தவறாக பதிவு செய்து வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புகார் உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது