தமிழ்நாடு

உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலைக்கு பதிவாகிறதா வாக்கு? பெரும் பரபரப்பு

Published

on

அவிநாசி அருகே வாக்களித்த சிலர் தாங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்ததாகவும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னத்த்ன் விளக்கு எரிவதாகவௌம் புகார் கூறியதால் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

அவிநாசி அருகே உள்ள கனியாம்பூன்டி என்ற தொகுதியில் 312வது வாக்குசாவடியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் சற்று முன்னர் அந்த வாக்குச் சாவடியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது ஒருசிலர் தாங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்ததாகவும், ஆனால் உதயசூரியனின் விளக்கு எரிவதற்கு பதிலாக இரட்டை இலையில் விளக்கு எரிந்ததாகவும், அதனால் தங்களுடைய வாக்கு மாறிப் போய் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் புகார் செய்தனர்.

இந்த புகாரை அடுத்து அந்த வாக்குச் சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினர் புகார் கொடுத்த நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் வகையில் உதயசூரியனுக்கு வாக்களிக்கும் போது இரட்டை இலையில் விளக்கு எரிந்து உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version