/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

Published

on

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக மீண்டும் தேர்வு எழுத உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்றும், இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆணை வழங்கவேண்டும் என்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெறும் பருவத் தேர்வுகளின்போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு தலா ரூ.65 தேர்வு கட்டணமாகவும், ஒவ்வொரு வாய்ப்புக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.750-ம் வசூலிக்கத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் தேர்வெழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Trending

Exit mobile version