தமிழ்நாடு
ரூ.500 கோடி மோசடி புகார்: ஓபிஎஸ் உதவியாளர் மீது வழக்குப்பதிவு!
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகார் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர் வீடுகளில் அதிரடியாக வருமானவரித்துறை சோதனை செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகாரில் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி ரூபாய் 500 கோடி மதிப்பிலான கிராவல் அள்ளிய விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் உதவியாளர் அன்னபிரகாசம் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.