தமிழ்நாடு

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு: விதிகளை மீறி பிரச்சாரம் செய்தாரா?

Published

on

விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது மற்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கமலஹாசன் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை என்ற பகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை பகுதியில் பிரச்சாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மட்டுமன்றி அவருடைய கட்சியினர் 650 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை மீறி தான் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கமல்ஹாசன் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்வது பழிவாங்கும் நடவடிக்கை என அவரது கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version