தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பட்டாசுக்கடை தீ விபத்து: பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Published

on

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிர் இழந்தார்கள் என்பதும் 9 பேர் படுகாயம் அடைந்தார்கள் என்றும் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் தீபாவளிக்காக அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசமானது ம்ட்டுமின்றி 7 உயிர்கள் பரிதாபமாக பலியானது என்பதும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பட்டாசுக்கடை தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீ விபத்து நடந்த பட்டாசு கடையை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தீ விபத்து ஏற்பட்ட சங்கராபுரம் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இவர் ஒரு பாஜக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது. தீ விபத்தில் 7 பேர் இறந்த நிலையில் அனுமதி இன்றி அதிக அளவு பட்டாசு வைத்திருந்ததாக பட்டாசு கடை உரிமையாளரும், பாஜக நிர்வாகியுமான செல்வகணபதி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version