தமிழ்நாடு

அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: திமுக வேட்பாளரை மிரட்டியதாக புகார்!

Published

on

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் என்றும், செந்தில் பாலாஜி எல்லாம் ஒரு ஆளா? அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்றும், எனக்கு இன்னொரு முகம் இருக்கு அது கர்நாடக முகம் அதை வெளிப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன் என்றும் பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக் எம்பி கனிமொழி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை மிரட்டி உள்ளதாக திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய வீடியோ வெளியான விவகாரத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version