தமிழ்நாடு

தினமும் உல்லாசம், 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த வாலிபர்!

Published

on

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#image_title

12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பாதிக்கப்பட்ட சிறுமி குடும்ப சூழல் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளரின் மகன் 27 வயதான கதிரேசனுக்கும் அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கதிரேசன் அந்த சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று கணவன், மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தினமும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வீட்டை விட்டு வெளியேறிய கதிரேசன் திரும்பி அங்கு வரவே இல்லை.

இதனையடுத்து அந்த சிறுமி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை போக்சோ பிரிவின் கீழ் வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கதிரேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version