இந்தியா

7 வயது சிறுமிக்கு 18 இடங்களில் தீக்காயம்: தத்தெடுத்த செவிலியரின் கொடூரம்!

Published

on

தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடம்பில் தீயால் சூடு வைத்த மிகக்கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

#image_title

பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி ஆசிரியை சிறுமியின் உடம்பில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

டெல்லி சப்தார்ஜங்க் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியாராக பணியாற்றி வருகிறார் 50 வயதான ரேணு குமாரி. தனது உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்த இவர் முதல் நாளில் இருந்தே அந்த சிறுமியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் உள்ளன. உடலில் சூடு வைத்தும், நாக்கை கத்தியால் அறுத்தும் கொடுமைப்படுத்துவதை தனது வாடிக்கையாக வைத்து தினந்தோறும் செய்து வந்துள்ளார்.

மேலும் டிசம்பர், ஜனவரி போன்ற குளிர் அதிகமான மாதங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் சிறுமியை படுக்க வைத்துவந்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரேணு குமாரி, அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சிறுமிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version