Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் தடையின்றி பால் விநியோகம்: அமைச்சர் நாசர் அறிவிப்பு!

Published

on

பால் கொள்முதல் விலையினை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு முழுவதிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் விநியோகம் எந்தவித தடையுமின்றி நடைபெறுகிறது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலை

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், தோல்வியிலேயே முடிந்தது. இதன் காரணமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

ஈரோடு மாவட்டம் இராயபாளையத்தில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை கீழே ஊற்றியும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, பால் கொள்முதலில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும், வழக்கம் போல் பால் கொள்முதல் நடைபெற்றதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஒரு சில பால் உற்பத்தியாளர் சங்கங்களைத் தவிர, மற்ற சங்கங்கள் வழக்கமான அளவிற்கு பால் விநியோகம் செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் குறித்து பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 9,354 சங்கங்களில் ஒரேயொரு சங்கம் மட்டுமே போராட்டத்தை அறிவித்துள்ளது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தவிர்த்து, வேறெங்கும் பால் நிறுத்தம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், எந்த சூழலையும் சந்திப்பதற்கு தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்21 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்24 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா1 நாள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்1 நாள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!