Connect with us

இந்தியா

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் அதிகரிப்பு

ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் கொரோனோ பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில், தமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் மாவட்டம் தான் தற்போது முதலிடத்தில் உள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் பரவல் அதிகம் இருக்கும் காரணத்தால், 462 நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவில் 13 நபர்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள், அரசு மருத்துவமனையில் தனித் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய சிகிச்சயில் 8 பேருக்கு குணமடைந்து விட்டதால், அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இப்போது 63 நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் அதிகரித்து வருவதால், சுமார் 30 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி கொரோனா தொற்று விகிதம் 0.61-ஐ விடவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
இந்தியா59 நிமிடங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்1 மணி நேரம் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா