தமிழ்நாடு
இடையூறு: டிடிவி தினகரன் மீது சேலத்தில் வழக்குப்பதிவு!
சேலத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பரப்புரை செய்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் தொடர்ந்து மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கடந்த வாரம் சேலத்தில் தங்கியிருந்து மக்களை சந்தித்து கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பரபரப்புரை செய்ததாக சேலம் மாவட்டத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய அமமுகவினர், பொதுமக்களும், அதிமுகவின் உண்மையான தொண்டர்களும் எங்களுடந்தான் இருக்கிறார்கள். தினகரனுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர் என்கின்றனர். மேலும் இதுதொடர்பாக பேசிய டிடிவி தினகரன், காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் மக்களை சந்திக்கிறோம். வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர் என்றார்.