Connect with us

இந்தியா

இந்தியாவின் முன்னணி வங்கியும் திவாலா? பதறியபடி விளக்கம் அளித்த நிர்வாகம்..!

Published

on

அமெரிக்காவில் உள்ள சிலிகான் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கி ஒன்றும் திவால் ஆனதாக வதந்தி பரவியதை அடுத்து அந்த வங்கிக்கு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி என்று கூறப்படும் எஸ்விபி வங்கி, வைப்புத்தொகை இருப்பு குறைந்ததால் திவால் ஆகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த நெருக்கடியில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் எஸ்விபி வங்கி திவால் குறித்த செய்தி இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பையைச் சேர்ந்த எஸ்விசி என்ற வங்கிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எஸ்விபி வங்கி திவால் அடைந்ததாக செய்திகள் வெளியானதை பலர் தவறாக எஸ்விசி வங்கி தான் திவால் ஆகிவிட்டது என்று தவறாக புரிந்து கொண்டனர். இதை வைத்து ஒரு சிலர் வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட நிலையில் பதறியபடி எஸ்விசி வங்கி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் எஸ்விசி வங்கி 100 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கி என்றும் இந்தியாவில் மட்டுமே இந்த வங்கி செயல்படுகிறது என்றும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இதற்கு கிளைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது திவால் ஆகி இருப்பது அமெரிக்காவை சேர்ந்த எஸ்விபி வங்கி என்றும் அந்த வங்கிக்கும் எங்கள் எஸ்விசி வங்கிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது தவறாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் எங்கள் வங்கி நம்பிக்கையான வங்கி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான புரிதல் காரணமாக ஏராளமான எஸ்விசி வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை அவசர அவசரமாக எடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான பின்னரே வாடிக்கையாளர்கள் நிம்மதியை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!