Connect with us

இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 1,861 குழந்தை தொழிலாளர் வழக்குகள்: மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் விஜய் பாகெல் ஆகிய இருவரும், நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்களை பற்றிய வழக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய கேள்வியை எழுப்பினர். இவர்களின் கேள்விக்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ரமேஸ்வர் தெளி, எழுத்துப் பூர்வமாக இன்று அவையில் பதில் அளித்தார்.

குழந்தை தொழிலாளர் வழக்குகள்

மத்திய மந்திரி ரமேஸ்வர் தெளி அளித்த பதிலில், நம் நாட்டில் 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், கடந்த 3 வருடங்களில் மொத்தமாக 1,861 வழக்குகள் பதிவாகி இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 772 குழந்தை தொழிலாளர் வழக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 476 குழந்தை தொழிலாளர் வழக்குகளும் பதிவாகி உள்ளது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டில் சுமார் 613 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

அதிகபட்ச வழக்குகள்

இதில் அதிகபட்சமாக 685 வழக்குகள் தெலங்கானா மாநிலத்தில் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 186 வழக்குகளுடன் அசாம் மாநிலம் உள்ளது. மேலும், மிக குறைந்த அளவில் அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சத்தீஷ்கர், மேகாலயா, டாமன் டையூ மற்றும் பிற மாநிலங்களில் 2 குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு, மத்திய அரசு பன்முக செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை, இலவச கல்வி உரிமை, புனரமைப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சி உள்பட பல விரிவான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குழந்தை தொழிலாளர் வழக்குகளை அரசு கட்டுப்படுத்தி வருகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக நீக்குவதற்கு பல்வேறு சட்டங்களும் உள்ளன என உறுப்பினர்களிடம் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்