Connect with us

வணிகம்

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!

Published

on

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் முறைக்கு டிசிஎஸ் என்ற வரி வசூல் செய்யப்படும் என்றும் அது 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது என்பதையும் பலர் அறிந்ததே.
வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் கல்வி மருத்துவ நோக்கங்களுக்காக பணம் அனுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக தவிர பிறவற்றிற்கு அனுப்பும் பணத்திற்கு இந்த வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் பணம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக இருந்தால் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும். கல்வி கடனாக இல்லாமல் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 5% டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புதிய வடிவின்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அதாவது கல்வி செலவு இல்லாமல் மற்ற செலவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடன் கல்விக்காக செய்யப்படும் செலவு உள்ளிட்ட வகைகளுக்குஅனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் வரி இல்லை என்றாலும் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பிற செலவுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் வசதியாக விரும்பியவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இங்கிருந்து பணம் அனுப்பி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் கல்வி கட்டணம், விடுதி செலவு ஆகியவற்றிற்காக இருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டில் ஆடம்பர அறைகளில் தங்குவது, அப்பார்ட்மெண்டில் தங்குவது மற்றும் பிற செலவுகள் ஆகியவை கல்விச்செலவுடன் வராது என்றும் எனவே அந்த செலவுகளுக்கு 20% டிசிஎஸ் வரி பொருந்தும் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதால் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்