Connect with us

இந்தியா

திருமணமான மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்கவிட்டு மாயமான கணவர்; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Published

on

பெங்களூரில் திருமணம் ஆன மறுநாளே மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு கணவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் 16ஆம் தேதி சிக்கபல்லாபூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் நடந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆன மறுநாள் இருவரும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது பெங்களூரில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் டிராபிக்கில் கார் நின்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கணவர் காரின் கதவை திறந்து ஓடிவிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பின்பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மனைவி கணவரை விரட்டிக் கொண்டு சென்றும் பயனில்லை. அவர் ஒரு சில நிமிடங்களில் மாயமாகிவிட்டார்.

இதனை அடுத்து கிட்டத்தட்ட20 நாட்களுக்கு மேலாக தனது கணவரை காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது மனைவியை விட்டுச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே கோவாவில் ஒரு குடும்பம் இருந்ததாக கூறப்படுகிறது.


கோவாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தனக்கும் அந்த பெண்ணுக்கும் விவாகரத்துக்கும் ஆகிவிட்டது என்ற கூறிதான் இந்த பெண்ணை திருமணம் செய்ததாகவும் ஆனால் உண்மையில் விவாகரத்து ஆகவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து கோவாவில் உள்ள அவருடைய மனைவி, தான் தற்கொலை செய்து கொள்வதாக தனது கணவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் பயந்து அவர் தன்னை தவிக்க விட்டு விட்டு ஓடி விட்டதாகவும் மனைவி அந்த புகாரில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறை கோவா போலீஸ் உதவியுடன் கணவரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை தேடி கண்டிப்பாக வருவார் என்றும் அவர் பாதுகாப்பாக இருந்தாலே போதும் என்றும் செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறி உள்ளார்.

திருமணமான ஒரே நாளில் மனைவியை தவிக்க விட்டு விட்டு ஓடி சென்ற கணவனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!