Connect with us

இந்தியா

சாலையை உடைத்து கொண்டு வெளியேறிய தண்ணீர்.. பைப் உடைப்பால் ஏற்பட்ட விபரீதம்..!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் வெடித்ததால் சாலை திடீரென விரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சாலைக்கு அட்யில் தான் எண்ணெய் மற்றும் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த குழாய்கள் அவ்வப்போது வெடித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் பாதிக்கப்பட்டிருந்த குழாய் திடீரென வெடித்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததோடு அந்த சாலை கடும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இது குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சாலை அமைதியாக இருக்கும் நிலையில் அந்த வழியாக ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது தரைக்கு அடியில் பாதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் மிகப்பெரிய சத்தத்துடன் பலமாக வெடிக்கிறது. அந்த சாலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சரிந்து விழுகின்றன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலை வெடிப்பின் போது சரியாக கடந்து சென்றதால் அவர் தூக்கி வீசப்படுகிறார். அவர் சிறிய அளவில் காயமடைந்ததாகவும் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை காப்பாற்றியதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சில மைல்கள் தூரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் குழாய் வெடிப்பிலிருந்து வெளியேறிய தண்ணீரின் அழுத்தம் காரணமாக சாலை பெயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தற்போது குழாயை சரி செய்யும் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலத்தடியில் பாதிக்கப்பட்ட குழாய் வெடித்ததால் முதலில் பூகம்பம் என்று நான் நினைத்து விட்டேன் என்றும் அதிலிருந்து வந்த தண்ணீரை பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம் என்றும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?