இந்தியா
பெங்களூரு விமானக் கண்காட்சியில் தீ; 300 வாகனங்கள் எரிந்து சாம்பல்!
பெங்களூருவில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் பற்றி எரிந்தன.
ஏரோ இந்தியா 2019 விமானக் கண்காட்சி பெங்களூரு யெலங்காவில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
பெங்களூரு தீயணைப்புத் துறை கிட்டத்தட்ட 300 வாகனங்களுக்கு இந்த விபத்தில் தீக்கிரையாகியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
தீவிபத்திற்கான காரணம் என்னவென்று விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பற்றவைக்கப்பட்ட சிகிரெட் துண்டு காய்ந்த புல்லில் பட்டுத் தீப்பற்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.