Connect with us

இந்தியா

ஷாருக்கான் மனைவி கெளரிகான் மீது புகார்.. எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு..!

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது மும்பையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஃபேஷன் திறையில் செல்வாக்கு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் என்பதும் ’கௌரி கான் டிசைன்ஸ்’ என்ற பெயரில் சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் பல வணிகங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவர், ஷாருக்கானின் மனைவி கெளரிகான் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கௌரி கான் மீது புகார் அளித்தவரின் பெயர் ஜஸ்வந்த் ஷா என்றும் இவர் ஒரு தொழிலதிபர் என்றும் இவர் லக்னோவில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக முன்பணமாக ரூபாய் 86 லட்சம் கொடுத்து இருந்தார் என்றும் ஆனால் அவருக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பிளாட்டையும் வழங்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜஸ்வந்த் ஷா தான் வீடு பிளாட் வாங்குவதற்காக முன்பணம் கொடுத்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் கௌரி கான் தான் என்றும் இந்த பிளாட்டை வாங்குவதற்கு அவர் விளம்பரப்படுத்தியதால் அதன் தாக்கத்தின் காரணமாக தான் நான் அங்கு பிளாட் வாங்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ஃப் வியூவில் பிளாட் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜஷ்வந்த் சிங், தனக்கு தர வேண்டிய பிளாட்டை, ரியல் எஸ்டேட் நிறுவனம் வேறொருவருக்கு குடியிருப்பை வழங்கியதாகவும், தனது பணத்தைக் கூட திருப்பித் தரவில்லை என்றும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். மும்பை காவல்துறையில் அவர் அளித்த புகாரில் கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் நிறுவனம் உள்ளிட்ட பிற பெயர்களும் அடங்கும்.

துளசியானி கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட் லிமிடெட் தலைமை நிர்வாக இயக்குநர் அனில் குமார் துளசியானி மற்றும் அதன் இயக்குநர் மகேஷ் துளசியானி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கௌரி கான் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதைப் பார்த்ததாகவும், அதனால் தான் பிராண்டில் நம்பிக்கை வைத்ததாகவும் ஷா போலீசாரிடம் கூறினார்.

கௌரி அல்லது அவரது தரப்பினர் யாரும் இந்த புகாருக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து பிராண்ட் அம்பாசிடரான கெளரிகான், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)