Connect with us

விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தானுடன் மோதி தோற்கடிக்க வேண்டும்: சசி தரூர், கவாஸ்கர் கருத்து!

Published

on

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக்கூடாது எனவும், மோத வேண்டும் எனவும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இதனால் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ஜூன் 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே இந்திய அணியால் உலகக்கோப்பையை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த விளக்கத்தில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும். மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வந்து இந்தியா மோதாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது.

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும் போது, இந்தியா கிரிக்கெட், ஹாக்கி என அனைத்துவிதமான விளையாட்டு உறவுகளையும் பாகிஸ்தானுடன் முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்ப்பதை விட அவர்களுடன் விளையாடி அவர்களை தோற்கடிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றார். அதேப்போல இன்று காலை பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி ஜெயிக்க வேண்டும். 1999 கார்கில் போருக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடி அவர்களை தோற்கடித்தது. அதுபோல இந்த முறையும் நடக்க வேண்டும், அவர்களுடன் விளையாடாமல் புறக்கணிப்பது என்பது போரிடாமலே தோற்றுப்போவது போல ஆகும் என்றார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்54 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)