Connect with us

இந்தியா

ஒரு வெங்காயத்தின் எடை 750 கிராம்.. உரமின்றி விளைச்சல் செய்து விவசாயி சாதனை..!

Published

on

சாதாரணமாக ஒரு வெங்காயம் 50 கிராமில் இருந்து 100 கிராம் வரைஇருக்கும். அதிசயமாக ஏதாவது ஒரு வெங்காயம் 500 கிராம் வரை இருந்ததாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு வெங்காயம் 750 கிராம் என்ற வகையில் பயிரிட்டு உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான மகாஹாராஷ்டிராவின் நாசிக்சந்தையில் கிலோ ரெண்டுக்கு மட்டுமே வெங்காயம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் போராட்டம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில்வெங்காயத்தின் விலை ஒரு பக்கம் வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவை சேர்ந்த 42 வயது விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் 750 கிராம் எடை உள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கரும்பு பயிரிட்டபோது ஊடுபயிராக வெங்காயத்தை பயிரிட்டதாகவும் அந்த வெங்காய பயிருக்கு என தனியாக உரம் ஏதும் விடவில்லை என்றும் கரும்புக்கு விடப்பட்ட உரம் தான் அதற்கும் இடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெங்காயத்தின் அசாதாரண வளர்ச்சிக்கு ஊடுபயிரில் வெங்காயம் விளைவித்தது தான் தான் காரணம் என்று இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் இந்த அளவு பெரியதாக வளர்வதற்கு ஊட்டச்சத்து வழங்கல் அல்லது மரபணு மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றும் இது குறித்து சர்வதேச வேளாண் பயிர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் குறைவாக பயிரிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊடுபயிராக பயிரிட்டேன் என்றும் ஆனால் ஒரு வெங்காயத்தின் எடை 750 கிராம் வரும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என்றும் அந்த விவசாயி தெரிவித்துள்ளார். மேலும் வெங்காயத்தின் விலை அதிகமான உடன் இது போன்ற அதிக வெங்காயத்தை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விவசாய அதிகாரிகள் அவரது நிலத்தை ஆய்வு செய்து வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்துஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரே ஒரு வெங்காயம் 750 கிராம் என்பது அந்த பகுதி மக்களை மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

தினக் கூலிகளுக்கும் பென்ஷன்! பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பற்றித் தெரியுமா?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்8 மணி நேரங்கள் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!

ஜோதிடம்8 மணி நேரங்கள் ago

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

பணம் பெருகும் வழி: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை எப்படி வைக்க வேண்டும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதுப்பிக்கும் சனி பகவான்: நவம்பரில் அதிர்ஷ்டம் மலரும் ராசிகள்!

ஜோதிடம்8 மணி நேரங்கள் ago

துலாம் ராசி இன்றைய பலன்: சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள், திறமைகள் வெளிப்படும்!

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

தனுசு ராசி இன்றைய பலன்: செல்வம் சேரும், பாசம் பொழியுங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

குரு சந்திரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி யோகம் பேரதிர்ஷ்டம் தரவுள்ளது!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (25/08/2024)!

உலகம்7 நாட்கள் ago

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

செய்திகள்7 நாட்கள் ago

புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

குளிர், இருமலுக்கு சிறந்த மருந்து – காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு-சனி இணைப்பு: ஜாக்பாட் ராசிகள் செழிப்பையும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!