Connect with us

உலகம்

பெண்கள் பள்ளிகளை மூடுவதற்காக மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

Published

on

பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ஈராநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவிகள் சிலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் பள்ளி செல்வதை தடுப்பதற்காகவும் மாணவிகளின் பள்ளிகளை மூடுவதற்காகவும் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படுவதாகவும் இதுவரை நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈராம் நாட்டில் உள்ள கோம் என்ற நகரில் தான் நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை மூடும் நோக்கத்தில் இந்த விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது. மாணவிகள் படிப்பை தொடரக்கூடாது என்பதற்காக விஷம் கொடுக்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இதனை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட ரசாயன கலவைகள் விஷம் அல்ல என்றும் தீவிர சிகிச்சை தேவைப்படாத அளவில்தான் இந்த ரசாயன கலவை இருந்தது என்றும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் ஈரான் அரசின் கல்வி அமைச்சர் யூசுப் தெரிவித்துள்ளார்.

மேலும் விஷம் கொடுத்ததாக அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அடிப்படை நோய்கள் இருந்ததாகவும் மாணவிகளுக்கு விஷம் கொடுத்ததாக வதந்திகள்தான் பரப்பப்பட்டு வருகிறது என்றும் இருப்பினும் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 50 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த விஷம் கொடுத்தது யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மாணவிகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்ததில் இருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் மீது கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருகிறது. இதனை அடுத்து ஹிஜாப் அணிய மாட்டோம் என்று பல மாணவிகள் போராடி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஈரான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!