Connect with us

இந்தியா

பிளிப்கார்ட் எடுத்த அதிரடி முடிவு.. 4500 இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு..!

Published

on

பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளதை அடுத்து வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்கத்தை செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுக்காவிட்டாலும் சம்பள குறைப்பு மற்றும் சம்பள உயர்வை நிறுத்துதல் ஆகிய நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது 30 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் காலத்திற்கான ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு அளிக்கப் போவதில்லை என மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 4500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஏற்ற இறக்க பொருளாதார நிலை காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வருவாய் குறைந்து வருவதால் இந்த ஆண்டு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு 30 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஊழியர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியாகும்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்21 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்24 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா1 நாள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்1 நாள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!