Connect with us

விளையாட்டு

பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகளுக்கு சவுரவ் கங்குலி எதிர்ப்பு!

Published

on

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இது தொடர்பாக பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், ஜூன் 16-ம் தேதியன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடாமலேயே இந்திய அணியால் உலகக்கோப்பையை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்த்தால் இந்தியா புள்ளிகளை இழக்க நேரிடும். மேலும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வந்து இந்தியா மோதாவிட்டால் இந்தியா கோப்பையை இழக்க நேரிடும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இதுகுறித்து தெரிவித்தபோது, பாகிஸ்தானுடன் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி உறவுகளை மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!