சினிமா
தலை தப்பிச்சது தம்புரான் புண்ணியம்.. படப்பிடிப்பில் பெரும் விபத்து.. மரண பீதியில் விஷால்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லைட்டுக்காக செட் பண்ணி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
ஒரு நொடி கேப் தான் இல்லை என்றால் நான் இப்போ இருந்திருக்க மாட்டேன். கடவுளுக்கு நன்றி என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்களில் ரிஸ்க்கான காட்சிகள் ரசிகர்களை என்டர்டெயின் பண்ண பெரும் பொருட்செலவு மற்றும் நடிகர்களின் கடின உழைப்பு போட்டு எடுக்கப்படுகிறது.
இதில், பல ஸ்டன்ட் மேன்கள் உள்பட முன்னணி நடிகர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். கடைசியாக படம் பார்க்கும் போது, சிறு சொதப்பல் இருந்தாலும், ஸ்டன்ட் ஃபேக்கா இருக்கு என்றும், எப்படி ஒருத்தர் அடிச்சா இத்தனை பேர் விழுகிறான் என்றும் ரத்தம் ஒழுகாமல், ஒரே இடத்தில் நிற்கிறது என்றும் விமர்சித்து விடுகின்றனர்.
நடிகர் விஷால் தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வரும் நிலையில், மார்க் ஆண்டனி படத்திற்காக மேலும், மெனக்கெட்டு நடித்து வருகிறார். கடைசியாக லத்தி படத்திற்காக ஏகப்பட்ட அடி பட்டும் அந்த படமும் அவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை.
நூழிலையில் உயிர் தப்பி உள்ளோம் என விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் விபத்து நடந்த காட்சியின் வீடியோவையே வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளனர். கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும், இந்த ட்வீட்டை போட நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என எஸ்.ஜே. சூர்யா இந்த நிலையிலும் தனது நக்கல் மாறாமல் ட்வீட் போட்டுள்ளார்.
Jus missed my life in a matter of few seconds and few inches, Thanks to the Almighty
Numb to this incident back on my feet and back to shoot, GB pic.twitter.com/bL7sbc9dOu
— Vishal (@VishalKOfficial) February 22, 2023
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற அந்த பெரிய விபத்து 3 உயிர்களை பலி வாங்கியது. பிப்ரவரி 19ம் தேதியான அன்று ஷூட்டிங்கே எடுக்க மாட்டேன் என்றே ஷங்கர் இந்தியன் 2 ஷூட்டிங்கை இந்த ஆண்டும் அந்த நாளில் தள்ளி வைத்தார் என தகவல்கள் வெளியாகின.
விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிய பாதுகாப்புகளை மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்தவும் நடிகர் விஷால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.