Connect with us

உலகம்

இனிமேல் வேலையே வேண்டாம்.. கூகுளில் இருந்து வெளியேற்றப்பட்ட 7 ஊழியர்களின் அதிரடி முடிவு..!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அடுத்த வேலையை தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது விவரங்களை குறிப்பிட்டு தங்களுக்கு வேலை கிடைக்க உதவும்படி கேட்டு வருகின்றனர். வேலைநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏழு ஊழியர்கள் இனிமேல் யாரிடமும் நாங்கள் வேலை செய்ய தயாராக இல்லை என்றும் சொந்த தொழில் செய்யப் போகிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களில் ஒருவர் கிர்க் என்பவர். இந்நிறுவனத்தால் 12000 ஊழியர்களில் வெளியேற்றப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதும் வேலை போய்விட்டது என்று தெரிந்தவுடன் முதல் ஐந்து நிமிடம் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் ஆனால் அதன் பிறகு என்னால் எனது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கட்ட வேலையை செய்ய தொடங்கினேன் என்றும் தெரிவித்தார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட சிலரை அணுகினேன் என்றும் அவர்களில் ஆறு பேர் எனது முடிவுக்கு ஒத்துழைத்தார்கள் என்றும் எனவே நாங்கள் ஏழு பேரும் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளோம் என்றும் அவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ஒரு தொடக்கம் தான் என்றும் மற்ற ஸ்டார்ட் அப் போலவே எங்கள் நிறுவனமும் வளர வாய்ப்பு இருக்கிறது என்றும் கடுமையான உழைப்பு மற்றும் எங்கள் திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பும் நாங்கள் எடுக்கும் முடிவுகளும் கண்டிப்பாக வாழ்க்கையை முன்னேற்றும் என்று நம்பிக்கையை கொண்டிருக்கின்றேன் என்றும் அந்த நம்பிக்கையில் சிறிதளவு சந்தேகமில்லாமல் திறமையாக உழைத்தால் நிச்சயம் எங்கள் அனுபவம் எங்கள் நிறுவனத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மிகச்சிறந்த முன்னாள் கூகுள் ஊழியர்களுடன் நான் இணைந்துள்ளேன் என்றும் நாங்கள் NYC மற்றும் SF இல் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றோம் என்றும் இது மோசமான முடிவாக இருக்கலாம் என்று சிலர் கருதினாலும் எங்களுக்கு உற்சாகமான மற்றும் சவாலான பணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த ஏழு முன்னாள் கூகுள் ஊழியர்களின் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிச்சயம் வளர்ச்சி அடையும் என்று பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!