உலகம்
ஒரே ஜாடையில் 60 குழந்தைகள்: மோசடி செய்த விந்தணு தானம் செய்தவர்!
![Sperm Donate 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Sperm-Donate-1-1.jpg)
ஆஸ்திரேலியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் மாறிவரும் காலநிலை மற்றும் உணவு பழக்கவழக்கம். இதனால் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் இல்லாமல் போகிறது. எனவே அங்கு விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது.
![Sperm donate - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Sperm-donate-2.jpg)
#image_title
அதே நேரத்தில் தன்னுடைய ஆண் துணைக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவர்களுக்கு உதவ கருத்தரிப்பு மையங்கள் வேறொருவரிடம் இருந்து விந்தணுவை தானமாக பெற்று அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள செய்கின்றனர். இந்நிலையில் இப்படி குழந்தை பெற்றுக்கொண்டவர்களின் ஒன்றுகூடல் நிக்ழச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக அவர்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மாதிரியான ஜாடையில் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த சில பெண்கள் கருத்தரிப்பு மையத்துக்கு சென்று விசாரித்ததில் ஒரே நபர் பல்வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது தெரியவந்தது. இதனை கேட்ட அப்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்திரேலியா சட்டப்படி மனித விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானதாகும். ஆனால் இங்கு ஒருவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றம் செய்து 60 க்கும் மேற்பட்ட முறை விந்தணு தானம் செய்துள்ளார்.