Connect with us

இந்தியா

திடீரென நடு வழியில் நிறுத்தப்பட்ட டெல்லி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்.. என்ன காரணம்?

Published

on

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பிய டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் என்ற ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டெல்லி-சென்னை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயில் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பயண்இ ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதை மற்ற இரண்டு பயணிகளும் உறுதி செய்ததை அடுத்து உடனடியாக ரயிலை நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த அந்த பயணிகள் தங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து ரயில்வே அதிகாரியிடம் அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அந்த பயணிகள் தெரிவித்ததை அடுத்து அந்த கோச் முழுவதும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ஜிஆர்பி போலீஸ் மற்றும் ஆர்பிஎப் போலீஸ் படைகள் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட கோச் முழுவதும் சோதனை வேட்டையை நடத்தினர். மேலும் வெடிகுண்டு செயலிழ்க்கும் படைக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் வரவழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி2 கோச்சில் தான் வெடிகுண்டு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் ஜி3, ஜி4 என மூன்று பெட்டிகளிலும் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என்பதும் மூன்று பெட்டிகளிலும் முழுமையான சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 மணி நேரம் சோதனை நடந்த பின்னர் ரயிலில் எந்த விதமான வெடிபொருளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே ரயிலை முன்னோக்கி செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர். மேலும் வெடிகுண்டு குறித்து வதந்தி பரப்பியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த வதந்தியை கிளப்பினார்கள்? அல்லது அவர்களுக்கு தவறான தகவல் கிடைத்ததால் இந்த தகவலை ரயில்வே துறையினர்களிடம் கூறினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!