பிற விளையாட்டுகள்
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டிகள்..!
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கான இந்திய ஹாக்கி உறுப்பினர்கள் குழுவினர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தைப் புதுப்பித்து, சர்வதேச தரத்திலான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னையில் கடைசியாக 2008-ம் ஆண்டு பெல்ஜியத்துக்கு எதிராகச் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற்றது. அதன் பின் எந்த ஒரு சர்வதேச ஹாக்கி போட்டிகளும் சென்னையில் நடைபெறவில்லை.
இந்த ஹாக்கி குழுவினர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை மாநில அரசுக்கு விரைவில் சமர்ப்பிப்பார்கள்.
மறுபக்கம் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தற்போது தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளதால், எளிதாக இதற்கான பணிகள் முடிந்து, விரைவில் சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.